ஆளுமை:பவளசுந்தரம்மாள், தம்பிராஜா

From நூலகம்
Name பவளசுந்தரம்மா
Pages பொன்னையா
Pages பாக்கியம்
Birth 1934.04.28
Pages 2007.11.13
Place ஆரையம்பதி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவளசுந்தரம்மாள், தம்பிராஜா ஆரையம்பதியில் பிறந்தவர். இவரது தந்தை பொன்னையா; தாய் பாக்கியம். மட்டக்களப்பு ஆரையம்பதி நொத்தாரிசு மூத்ததம்பி வித்தியாலயம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம், மட்டக்களப்பு திரேசா பெண்கள் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார். மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராவார் பவளசுந்தரம்மாள். ஆசிரியரான இவர் மலரத்துடிக்கும் மொட்டுக்கள், நினைவே நீ சுடாதே ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது நினைவாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டு தோறும் சிறந்த நாவலுக்கு நாவலாசிரியை பவளசுந்தரம்மாள் தமிழியல் விருது வழங்கிக் கௌரவிக்கிறது.