ஆளுமை:நுஹா, ஐ.எஸ்

From நூலகம்
Name நுஹா, ஐ.எஸ்
Pages இஸ்மாயீல்
Pages சாலியா உம்மா
Birth 1983.02.20
Place சம்மாந்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நுஹா, ஐ.எஸ் (1983.02.20) அம்பாரை சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை இஸ்மாயீல்; தாய் சாலியா உம்மா. சம்மாந்துறையில் முதற் பெண் கவிதைத் தொகுதியை வெளியிட்ட பெருமைக்குரியவர் சுஹா. இவருடைய கணவர் டொக்டர் ஏ.ஆர்.நியாஸ் அகமட். இரண்டு ஆண், மூன்று பெண் பிள்ளைகளின் தாயாவார். ஆரம்பக் கல்வியை கமு/சது/முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை அல்மர்ஜான், கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரியிலும் கற்றார். அஸ்ஸாலிஹாத் மகளிர் அரபுக் கல்லூரியில் மௌலவியா முடித்துள்ளார். கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். 1999ஆம் ஆண்டு முதல் எழுத்துத்துறையில் காலடி எடுத்து வைத்த எழுத்தாளரின் ஆக்கங்கள் தினகரன், புதுப்புனல் ஆகிய நாளிதழ்களிலும் மரங்கொத்தி, படிகள், பூங்காவனம் ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. படைப்பு, கல்வெட்டு ஆகிய மின்னிதழ்களிலும் கவிதைகளை எழுதியுள்ளார். புள்ளியைத் தேடும் புள்ளிமான் எனும் நூலை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார். கலைமுகம் சஞ்சிகையிலும், அறிஞர் சித்திலெப்பை ஆய்வு மையத்தால் நடாத்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான சான்றிதழையும் இவரின் கட்டுரை பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.


விருதுகள்

மேம்பாட்டாளர் விருது 2015 - அம்பாரை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை

கவியருவி - 2016 தடாகம் கலை இலக்கிய வட்டம்

கவினெழி - 2016 தடாகம் கலை இலக்கிய வட்டம்

கௌரவ விருது - 2017 இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்

கலைஞர் சுவதம் - 2018 கலாாசர அதிகார சபை

முதல் முத்து - 2019 HWS தமிழ் ஊடகம் வலையமைப்பு (இணைந்து)


குறிப்பு : மேற்படி பதிவு நுஹா, ஐ.எஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்