ஆளுமை:தையல்நாயகி, சிவஞானம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:44, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தையல்நாயகி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தையல்நாயகி சிவஞானம்
பிறப்பு 1930.04.19
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தையல்நாயகி சிவஞானம் (1930.04.19 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். செல்லத்துரை, வைத்தியநாதஐயர், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தன்குட்டி, கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் இசைக் கற்ற இவர் தனது 08ஆவது வயதிலிருந்து 60 வயது வரை கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார்.

சத்தியவான் சாவித்திரி, மங்கையற்கரசி, ஆயிரம் தலை வணங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகிய நாடகங்களை இவர் எழுதி மேடையேற்றியதோடு காரைநகர் ஶ்ரீ சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரா தேவஸ்தானத்தில் பிள்ளைகளுக்கு பண்ணிசைப் பயிற்றுவித்தல், மற்றும் பாடசாலையில் நடைபெறும் சங்கீத போட்டிகளில் பங்குபற்றியமை போன்ற பல சேவைகளை இவர் கலைத்துறைக்கு ஆற்றியுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக 2005ஆம் ஆண்டில் காரைநகர் கலாசார சபையால் கலைஞான சுரபி என்ற பட்டத்தையும், காரைமத்தி கிராம பொது அமைப்பொன்றினால் 2003இல் சிவப்பணி நாயகி எனும் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 71