ஆளுமை:தம்பிராசா, வீரவாகு

From நூலகம்
Name தம்பிராசா
Pages வீரவாகு
Pages வள்ளியம்மை
Birth 1904
Pages 1986.03.01
Place புங்குடுதீவு
Category வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிராசா, வீரவாகு (1904 - 1986.03.01) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர். இவரது தந்தை வீரவாகு; தாய் வள்ளியம்மை. இவர் தம்பையா என அறியப்படுபவர். இவர் ஏழு தலைமுறைகளுக்கு மேலாக வைத்திய சோதிடப் பரம்பரையில் வந்தவராவார். இவர் தனது மாமனாரும் பிரபல வைத்தியருமான இலட்சுமணப்பிள்ளையிடம் வைத்தியம் பயின்று, இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றிச் சுதேச வைத்தியராகப் பதவி பெற்றவர். இவர் கைநாடி பார்த்து நோயாளர்களின் நோய்களைக் கூறும் வல்லமை பெற்றிருந்தார்.

இவர் ஆரம்பத்தில் தனது குருவான இலட்சுமணப்பிள்ளையுடன் தீவுப்பகுதிக்குச் சென்று வைத்திய சேவையில் ஈடுபட்டுப் பின்னர் 1939 ஆம் ஆண்டு சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்குச் சென்று சில வருடம் அங்கு தங்கியிருந்து வைத்திய, சோதிட சேவை புரிந்தார். அத்தோடு வட இலங்கைச் சித்த ஆயுர்வேத வைத்திய சங்கத்தின் உறுப்பினரான இவர், சித்தர்களால் அருளப்பட்ட ஏட்டுச் சுவடிகளைக் கற்று, நோய்களின் அறிகுறிகளையும் அவற்றிற்கான பரிகார முறைகளையும் பாட்டின் மூலம் எடுத்துக்கூறும் திறமை பெற்றிருந்ததுடன் ஆங்கில வைத்தியம் கற்றோரால் கைவிடப்பட்ட பல நோயாளர்களைக் குணமாக்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 222-223