ஆளுமை:ஜெயரஞ்சினி, ஞானதாஸ்

From நூலகம்
Name ஜெயரஞ்சினி
Birth 1954
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயரஞ்சினி, ஞானதாஸ் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பிறந்த கலைஞர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கற்றுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடநெறியில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்றவர். பாடசாலை, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது அரங்கச் செய்பாடுகளில் ஈடுபட்டு வந்த ஜெயரஞ்சினி இன்றும் அரங்க முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் யாழ்ப்பாணத்தின் மிகச்சிறந்த பெண் அரங்கியலாளராவார். ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண் என்ற விடயத்தில் ஆய்வு செய்து முதுதத்துவமாணிப் பட்டம் பெற்ற முதற்பெண் ஆய்வாளராவார். யாழ்ப்பாணப் பலக்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் அரங்கியல் விரிரையாளராகப் பணியாற்றி தற்பொழுது மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் அரங்கியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். நாடக எழுத்தாளர், தயாரிப்பாளர், நெறியாளர், நடிகர், ஆய்வாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர். ”கூர், மூழாத்தி எச்சில் இலை” இவரது சிறந்த படைப்புக்களாகும். ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண் என்ற தனது ஆய்வுக்கட்டுரையை நூலாக்கம் செய்துள்ளார். நாடகப் பட்டறைகள், ஆய்வு முயற்சிகள் என இவரது பணிகள் ஏராளம். இவர் பெண்ணியல்சார் செயற்பாடுகளையும் அரங்கினைப் பெண்ணியம் சார்ந்ததாக செயற்படுத்தி வருகிறார்.

வெளி இணைப்புக்கள்