"ஆளுமை:ஜீவரட்ணம் ஆசாரி, ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=ஜீவரட்ணம் ஆசாரி, ஆறுமுகம்|
+
பெயர்=ஜீவரட்ணம் ஆசாரி|
 
தந்தை=ஆறுமுகம்|
 
தந்தை=ஆறுமுகம்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1938|
+
பிறப்பு=1938.08.16|
 
இறப்பு=2001|
 
இறப்பு=2001|
 
ஊர்=திருநெல்வேலி|
 
ஊர்=திருநெல்வேலி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆ. ஜீவரட்ணம் ஆசாரி (1938 - 2001) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் ஆரம்பக் கல்வியை திருநெல்வேலி இந்து தமிழ்க் கலவன் படசாலையிலும், உயர் கல்வியை யழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியிலும் மேற்கொண்டார். தந்தையாரை தன் சிற்பக் கலையின் குருவாகக் கொண்டு செயற்ப்பட்ட இக் கலைஞர் மாமல்லபுரம் கணபதி ஸ்தபதி, காரைக்குடி ஶ்ரீநிவாஸ் ஸ்தபதி, மாயவரம் ஏகாம்பரம் ஸ்தபதி, கும்பகோணம் ஏகாம்பரம் ஸ்தபதி ஆகியோரிடம் முறையாகக் சிற்பக் கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார்.
+
ஜீவரட்ணம் ஆசாரி, ஆறுமுகம் (1938.08.16 - 2001) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் ஆரம்பக் கல்வியைத் திருநெல்வேலி இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். இவர் தந்தையாரைத் தன் சிற்பக் கலையின் குருவாகக் கொண்டு செயற்பட்டதுடன் மாமல்லபுரம் கணபதி ஸ்தபதி, காரைக்குடி ஶ்ரீநிவாஸ் ஸ்தபதி, மாயவரம் ஏகாம்பரம் ஸ்தபதி, கும்பகோணம் ஏகாம்பரம் ஸ்தபதி ஆகியோரிடம் முறையாகக் சிற்பக் கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார்.
  
வண்ணை சிறீ காமாட்சி அம்மன், கோண்டவில் ஆசிமட விநாயகர், திருகோணமலை பத்திரகாளி அம்மன், இணுவில் சிவகாமி அம்மன், கலட்டி அம்மன், திருக்கேதீஸ்வரம் சிவன், சுழிபுரம் பறளாய் முருகமூர்த்தி, திருநெல்வேலி சிவன் போன்ற ஆலயங்களின் தேர்களை அழகுற வடிவமைத்து கொடுத்த இவர் மலேசியா நாட்டில் பதினான்கு ரதங்களை படைத்துள்ளார்.
+
வண்ணை சிறீ காமாட்சி அம்மன், கோண்டாவில் ஆசிமட விநாயகர், திருகோணமலை பத்திரகாளி அம்மன், இணுவில் சிவகாமி அம்மன், கலட்டி அம்மன், திருக்கேதீஸ்வரம் சிவன், சுழிபுரம் பறாளை முருகமூர்த்தி, திருநெல்வேலி சிவன் போன்ற ஆலயங்களின் தேர்களை வடிவமைத்துக் கொடுத்த இவர், மலேசியா நாட்டில் பதினான்கு ரதங்களைப் படைத்துள்ளார்.
  
சிற்பச் சக்ரவர்த்தி, சிற்பரதவித்தகன், சிற்பராஜசிம்மன், சிற்பக் கலாமணி, சிற்பகேசரி, சிற்பராஜ சிகாமணி, சிற்பகலா சிரோன்மணி, சிற்பக் கலாஜோதி ஆகிய பட்டங்களை ஆலய தேவஸ்தானங்களிடமிருந்து இவர் பெற்றுக் கொண்டார். 1993இல் யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தின் தொழில்திறன் விருதினையும் இவர் பெற்றுக் கொண்டார்.
+
இவர் சிற்பச் சக்ரவர்த்தி, சிற்பரதவித்தகன், சிற்பராஜசிம்மன், சிற்பக் கலாமணி, சிற்பகேசரி, சிற்பராஜ சிகாமணி, சிற்பகலா சிரோன்மணி, சிற்பக் கலாஜோதி ஆகிய பட்டங்களை ஆலய தேவஸ்தானங்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இவர் 1993 இல் யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தில் தொழிற்றிறன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
 +
 
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
* [http://www.thanajeyaseelan.com/?page_id=841 ஜீவரட்ணம் ஆசாரி பற்றி ஜெயசீலன்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|203}}
 
{{வளம்|7571|203}}
 +
{{வளம்|13844|224-227}}
 +
{{வளம்|15444|255-256}}

03:37, 22 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜீவரட்ணம் ஆசாரி
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1938.08.16
இறப்பு 2001
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜீவரட்ணம் ஆசாரி, ஆறுமுகம் (1938.08.16 - 2001) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் ஆரம்பக் கல்வியைத் திருநெல்வேலி இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். இவர் தந்தையாரைத் தன் சிற்பக் கலையின் குருவாகக் கொண்டு செயற்பட்டதுடன் மாமல்லபுரம் கணபதி ஸ்தபதி, காரைக்குடி ஶ்ரீநிவாஸ் ஸ்தபதி, மாயவரம் ஏகாம்பரம் ஸ்தபதி, கும்பகோணம் ஏகாம்பரம் ஸ்தபதி ஆகியோரிடம் முறையாகக் சிற்பக் கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார்.

வண்ணை சிறீ காமாட்சி அம்மன், கோண்டாவில் ஆசிமட விநாயகர், திருகோணமலை பத்திரகாளி அம்மன், இணுவில் சிவகாமி அம்மன், கலட்டி அம்மன், திருக்கேதீஸ்வரம் சிவன், சுழிபுரம் பறாளை முருகமூர்த்தி, திருநெல்வேலி சிவன் போன்ற ஆலயங்களின் தேர்களை வடிவமைத்துக் கொடுத்த இவர், மலேசியா நாட்டில் பதினான்கு ரதங்களைப் படைத்துள்ளார்.

இவர் சிற்பச் சக்ரவர்த்தி, சிற்பரதவித்தகன், சிற்பராஜசிம்மன், சிற்பக் கலாமணி, சிற்பகேசரி, சிற்பராஜ சிகாமணி, சிற்பகலா சிரோன்மணி, சிற்பக் கலாஜோதி ஆகிய பட்டங்களை ஆலய தேவஸ்தானங்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இவர் 1993 இல் யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தில் தொழிற்றிறன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 203
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 224-227
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 255-256