"ஆளுமை:சிவத்தம்பி, கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 17: வரிசை 17:
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[:பகுப்பு:சிவத்தம்பி, கா.|இவரது நூல்கள்]]
+
* [[:பகுப்பு:பகுப்பு:சிவத்தம்பி, கார்த்திகேசு|இவரது நூல்கள்]]
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

17:41, 24 மார்ச் 2024 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவத்தம்பி
தந்தை கார்த்திகேசு
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1932.10.05
இறப்பு 2011.07.06
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவத்தம்பி, கார்த்திகேசு (1932.10.05 - 2011.07.06) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த பேராசிரியர், இலக்கிய விமர்சகர், எழுத்தாளர், சமூகசிந்தனையாளர். இவரது தந்தை கார்த்திகேசு; இவரது தாய் வள்ளியம்மை. இவர் ஆரம்பக் கல்வியைக் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியைக் கொழும்பு சாகிராக் கல்லூரியிலும் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1970 இல் இலண்டன், பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் ஆய்வு நடாத்திக் கலாநிதிப் பட்டம் பெற்றார். 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி 1961 முதல் 1965 வரை பாராளுமன்றச் சம நேர மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார்.

1965 முதல் 1970 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் 1970 முதல் 1975 வரை விரிவுரையாளராகவும் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

தமிழ், சமயம், மானுடவியல், அரசியல், சமுகவியல், நாடகம், வரலாறு, கவின்கலை சார்ந்த துறைகளில் தடம் பதித்தவர். பல்கலைக்கழகக் காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்தார். இவர் இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். எழுத்துலகில் ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்படப் பல்வேறு துறைகள் சார்ந்து ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியுள்ளார். இவர் தமிழக அரசின் விருது, இலங்கை ஜப்பானிய நட்புறவுக் கழக விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 143 பக்கங்கள் 08-167
  • நூலக எண்: 10239 பக்கங்கள் 33-36
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 57-58
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 72-76
  • நூலக எண்: 1028 பக்கங்கள் 02-03
  • நூலக எண்: 2050 பக்கங்கள் 28-37
  • நூலக எண்: 2051 பக்கங்கள் 28-36
  • நூலக எண்: 2052 பக்கங்கள் 09-18