ஆளுமை:சிவகுமார், மாரிமுத்து

From நூலகம்
Name சிவகுமார்
Pages மாரிமுத்து
Birth 1973.08.18
Place கஹவத்தை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமார், மாரிமுத்து (1973.08.18 - ) மலையகம், கஹவத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மாரிமுத்து. கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது படைப்புக்கள் சங்கமம், வீரகேசரி, தினக்குரல், தினகரன், மித்திரன், வாரமலர், நவமணி, ஞானம், அமுது, தாடகம், சங்கநாதம், சர்வதேச தமிழர் கவிதைச் சிறப்பிதழ் மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாச் சிறப்பிதழ்கள், இலங்கை வானொலி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவர் சாம ஶ்ரீ சமூக ஒளி, மத்திய மாகாண சாஹித்திய பரிசு உட்பட மேலும் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1027 பக்கங்கள் 17