ஆளுமை:சியாமினி, இராசரத்தினம்

From நூலகம்
Name சியாமினி
Pages இராசரத்தினம்
Birth 1982.12.08
Place அச்சுவேலி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சியாமினி, இராசரத்தினம் (1982.12.08 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசரத்தினம். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி தமிழ் சிறப்புக்கலைப் பட்டதாரியும் தமிழ்ப் பண்டிதர் பரீட்சையில் முதலாம் தரத்தில் சித்தி அடைந்தவருமாவார். இவர் மனித உரிமைகள் நிலையத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

ஸஹாரா என்னும் புனைபெயரில் எழுதிவருகின்றார். இவரது பாவமா? பாடமா என்னும் முதலாவது சிறுகதை ஞானத்தில் வெளியானது. இவர் சித்தாந்த பண்டிதர், சைவப்புலவர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4695 பக்கங்கள் 14
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 73