ஆளுமை:சின்னத்துரை ஐயர்(சிவஶ்ரீ கணேசராஜக் குருக்கள்), நாகலிங்கம்

From நூலகம்
Name சிவஶ்ரீ கணேசராஜக் குருக்கள்
Pages நாகலிங்கம்
Birth
Place புங்குடுதீவு
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ கணேசராஜக் குருக்கள், நாகலிங்கம் புங்குடுதீவைச் சேர்ந்த சமயப் பெரியார், சமஸ்கிருத பண்டிதர். இவரின் தந்தை நாகலிங்கம். இவர் புங்குடுதீவில் பல வருடங்கள் வாழ்ந்து சமய சமூகக் கிரியைகளை நடத்தி வந்தார். சின்னத்துரை ஐயர் என்றழைக்கப்படும் இவரது முயற்சியால் பல ஆலயத் திருப்பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுக் கும்பாபிஷேகம் கண்டுள்ளன.

இவர் புங்குடுதீவுத் துறைமுக வாசலிலுள்ள மடத்துவெளிப் பிள்ளையார் கோவில் முதல் அனைத்து கோவில்களிலும் தன்னால் முடிந்தவரை பணிபுரிந்துள்ளார். இவர் மட்டுமன்றி இவரது குடும்பத்தாரும் பல வழிகளில் சமயத் தொண்டு ஆற்றி வருகின்றனர்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 133