ஆளுமை:சரவணமுத்துப்பிள்ளை, சுப்பிரமணியபிள்ளை
From நூலகம்
Name | சரவணமுத்துப்பிள்ளை |
Pages | சுப்பிரமணியபிள்ளை |
Birth | 1848 |
Pages | 1916 |
Place | ஊரெழு |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சரவணமுத்துப்பிள்ளை, சுப்பிரமணியபிள்ளை (1848 - 1916) யாழ்ப்பாணம், ஊரெழுவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியபிள்ளை. இவர் இளமைக் காலத்தில் புன்னாலைக்கட்டுவன் ச.கதிர்காம ஐயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அதன்பின் சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் உயர்தரத் தமிழ் இலக்கணங்களையும் இலக்கியங்களையும் கற்றார்.
இவர் சைவ உதயபானு என்னும் பத்திரிகையைத் தொடங்கி ஆறு ஆண்டுகள் வரை அதன் ஆசிரியராக இருந்து நடாத்தி வந்தார். மேலும் தமிழில் வசனநடை எழுதியதுடன் பிரபந்தம், கவிகளையும் பாடியுள்ளார்.
Resources
- நூலக எண்: 3003 பக்கங்கள் 123-127
- நூலக எண்: 963 பக்கங்கள் 109-110