ஆளுமை:சரவணபவக்குருக்கள், சு.

From நூலகம்
Name சரவணபவக்குருக்கள்
Birth 1864
Place காரைநகர்
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணபவக்குருக்கள், சு. (1864) காரைநகரைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார். இவர் காரைநகர் கார்த்திகேயப் புலவரிடமும் வடலியடைப்பு வேலுப்பிள்ளை உபாத்தியாரிடமும் கல்வி கற்றார். இவர் வியாவில் ஐயனார் கோவிலுக்கும் ஈழத்துச் சிதம்பரம் என வழங்கும் சிவன் கோவிலுக்கும் பூசகராகக் கடமையாற்றினார்.

இவர் இந்தியா சென்று ஆச்சாரியாபிஷேகம் பெற்ற பின்பு, சிவன் கோவிலில் துவஜாரோகணம் முதலிய நைமித்திகக் கிரியைகளில் ஈடுபட்டார். அத்தோடு ஈழத்துச் சிதம்பரம், ஐயனார் கோயில் புனராவர்த்தனக் கும்பாபிஷேகம் இவரால் செய்யப்பட்டது. இவர் புராணபடனம் ஓதுவதிலும் சிறந்து விளங்கினார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 283-284