ஆளுமை:சண்முகசுந்தரம், தில்லைநாதர்

From நூலகம்
Name சண்முகசுந்தரம்
Pages தில்லைநாதர்
Birth 1952.02.07
Place காரைநகர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகசுந்தரம், தில்லைநாதர் (1952.02.07 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை தில்லைநாதர். மிருதங்கத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர், இக்கலையை நாச்சிமார் கோயிலடி வே. அம்பலவாணரிடம் கற்று 1967 ஆம் ஆண்டிலிருந்து இக்கலைப்பணியை ஆற்றி வருகின்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பி தரத்தில் மிருதங்கத்தில் சித்தி எய்திக் கூட்டுத்தாபனக் கச்சேரிகளில் மிருதங்கம் இசைத்துள்ளார். மேலும் இவர் பாடசாலைக் கலை நிகழ்வுகளிலும் இசை விழாக்களிலும் ஆலய உற்சவ காலங்களிலும் மிருதங்கம் இசைத்துள்ளார். இவரது ஆளுமையைக் கெளரவித்து ஊர்காவற்துறைக் கலாச்சாரப் பேரவையால் 'கலாவித்தகர்' பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 102