ஆளுமை:கோபாலகிருஷ்ணன், முத்துக்குமாரு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபாலகிருஷ்ணன்
தந்தை முத்துக்குமாரு
பிறப்பு 1943.04.29
ஊர் வண்ணார்பண்ணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலகிருஷ்ணன், முத்துக்குமாரு (1943.04.29 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் மெல்லிசைக் கலைஞர். இவரது தந்தை முத்துக்குமாரு இவர் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் வண்ணார்பண்ணையில் குடிபெயர்ந்தார் . கோபாலகிருஷ்ணன் அவர்கள் சங்கீதபூஷணம் இராஜலிங்கம், தமிழ்நாடு சிதம்பரம், கிருஷ்ணமூர்த்தி ஐயர், அரியாலையூர் சங்கீதபூஷணம் பாலசிங்கம் ஆகியோரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார்.

'கண்ணன் இசைக் குழுவின் பாடகரான இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 1970 ஆம் ஆண்டு கொழும்பு நவரங்ககலா மண்டபத்தில் நடத்திய மெல்லிசை நிகழ்வில் பங்குபற்றியதோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையில் 'ஈழத்து பொப் இசை', 'இலை மறைத்த இசை' ஆகிய இரு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

இசையுருவாக்கம், இசைத் தட்டுருவாக்கம், நாடகங்களிற்கான இசையமைப்பு, திரைப்பட இசையமைப்பு, இசைக் கோஷ்டி ஆகியவற்றில் ஆற்றல் கொண்டு விளங்கினார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டு நிகழ்ச்சியில் இவரது கண்ணன் கோஷ்டியின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இவரின் கலைத்துறை முன்னேற்றத்தையும் சேவையையும் பாராட்டி இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் இவருக்கு 2007 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவித்ததோடு நல்லூர் பிரதேசக் கலாச்சாரப் பேரவையும் 2005 ஆம் ஆண்டு கலைஞானச்சுடர் விருதினை வழங்கிக் கௌரவித்தது. "இசைவாணர் கண்ணன்", "கண்ணன் மாஸ்டர்" போன்ற பட்டப் பெயர்களையும் இவர் கொண்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 99