ஆளுமை:கனகதுர்கா, கனகரத்தினம்

From நூலகம்
Name கனகதுர்கா
Pages கனகரத்தினம்
Pages திருவருட்செல்வமலர்
Birth 1991.02.21
Place ஏழாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகதுர்கா, கனகரத்தினம் (1991.02.21 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம்; தாய் திருவருட்செல்வமலர். இவர் ஏழாலை சைவ மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புத்துறையில் கல்வி கற்றுள்ளார். இவர் சிவகாமி, தமிழ்மாறன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வந்துள்ளார்.

இவர் வல்லிபுர ஆழ்வார், கட்டுவன் முனியப்பர், லண்டன் ஈலிங் ஸ்ரீகனக துர்க்கை அம்மன், ஊராங்குணை காளியம்மன் மீது திருவூஞ்சல்கள் பாடியுள்ளார். ஏழாலை மாந்தர் திருப்பள்ளியெழுச்சி, பேராதனை தமிழ் மாணவர் திருப்பள்ளியெழுச்சி ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார். இளஞ்சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16172 பக்கங்கள் 41
  • நூலக எண்: 17049 பக்கங்கள் 51