Name | கனகசபைப்புலவர் |
Pages | வேலுப்பிள்ளை |
Pages | நாகமுத்து |
Birth | 1829.02.12 |
Pages | 1873.01.09 |
Place | அளவெட்டி |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனகசபைப்புலவர், வேலுப்பிள்ளை (1829.02.12 - 1873.01.09) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் நாகமுத்து. வட்டுக்கோட்டை மிசனரியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர், தந்தையிடம் சுதேச வைத்தியமும் டாக்டர் உவாட்டிடம் ஆங்கில வைத்தியமும் கற்று ஆங்கில சுதேச வைத்தியராக விளங்கினார். இவர் வட்டுக்கோட்டையிலிருந்த பழைய சாஸ்திர சாலையில் ஆங்கிலம், தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றித் தேறியவர். இவர் புலவன், புலவன் கனகசபை என்றும் அழைக்கப்பட்டார்.
சிறுபராயத்திலிருந்து பாடும் திறமை உடைய இவர், 1751 ஆம் ஆண்டு விருத்தப்பாவினால் திருவாக்குப் புராணம் என்னும் நூலினைப் பாடியுள்ளதோடு அழகர் சாமி மடல் என்ற நூலினையும் ஒரு சொல் பல பொருள் தொகுதி என்னும் நிகண்டையும் பல தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளார். மேலும் கிறிஸ்தவ சமயத்தைக் கண்டித்துச் சுன்னாகம் முத்துக்குமார கவிராசர் பாடி வெளியிட்ட ஞானக்கும்மி என்னும் நூலுக்கு மறுப்பாக கும்மிப் பாட்டாக அஞ்ஞானக்கும்மி மறுப்பையும் வெளியிட்டார். இவர் நகைச்சுவை உணர்வோடும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
Resources
- நூலக எண்: 100 பக்கங்கள் 172
- நூலக எண்: 3003 பக்கங்கள் 61-66
- நூலக எண்: 963 பக்கங்கள் 70-71
- நூலக எண்: 11601 பக்கங்கள் 164-170