ஆளுமை:கந்தப்பிள்ளை, பரமானந்தர்

From நூலகம்
Name கந்தப்பிள்ளை
Pages பரமானந்தர்
Pages உலகாத்தையார் அம்மையார்
Birth 1766
Pages 1842.06.02
Place நல்லூர்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தப்பிள்ளை, பரமானந்தர் (1766 - 1842.06.02) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர், வைத்தியர், நாடகாசிரியர். இவரது தந்தை பரமானந்தர்; தாய் உலகாத்தையார் அம்மையார். இளமைக்காலத்தில் சண்முகச் சட்டம்பியாரிடம் பயின்ற இவர், கூழாங்கைத்தம்பிரானிடம் இலக்கண இலக்கியங்களையும் மாதகல் மயில்வாகனப் புலவர், இருபாலைச் சேனாதிராசமுதலியார் ஆகியோரிடமும் கற்றுப் புலமையாளரானார். ஆங்கிலம், போர்த்துக்கேசியம், ஒல்லாந்தம் ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்த இவர், பதினெட்டு ஆண்டுகள் அரச சேவையில் ஆராய்ச்சி உத்தியோகத்தில் இருந்தமையால் 'ஆராய்ச்சிக் கந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். இவர் ஆறுமுகநாவலரின் தந்தை ஆவார்.

இவர் சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், நீக்கிலாஸ் நாடகம், இரத்தினவல்லி விலாசம் உட்பட இருபத்தொரு நாடகங்கள் வரையில் பாடியுள்ளார். இரத்தினவல்லி விலாசம் என்னும் நூலினை ஆறுமுகநாவலர் பாடிமுடித்தார் என அறியக்கிடக்கிறது.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 158
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 208-210
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 02
  • நூலக எண்: 963 பக்கங்கள் 65
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 132-136