ஆளுமை:ஈழத்துச் சிவானந்தன்
From நூலகம்
Name | ஈழத்துச் சிவானந்தன் |
Birth | |
Pages | 2015.06.21 |
Place | புங்குடுதீவு |
Category | புலவர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஈழத்துச் சிவானந்தன் (-2015.06.21) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் புலவர் பட்டம் பெற்றவர்.
சிறந்த இலக்கியவாதியும் ஆன்மீக வாதியுமான இவர், "ஈழத்தில் ஞான் கண்ட சொற்செல்வர்கள்' என்னும் நூலை ஆக்கியுள்ளார். இந்நூலில் ஈழத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1980 களில் 'ஆலய மணி' என்னும் ஆன்மீக மாத இதழை வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வாழ்க்கை இதழின் சிறப்பாசிரியராகவும் இருந்தார்.
இவரது ஆளுமைகளுக்காகச் செந்தமிழ்ச் செல்வர், திருவாசகக் கொண்டல், சித்தாந்தச் செல்வர், சைவ நன்மணி, வெள்ளி நாக்கு நாவலர் போன்ற பட்டங்களால் கெளரவிக்கப்பட்டார்.
Resources
- நூலக எண்: 4428 பக்கங்கள் 464