ஆளுமை:இளங்கோவன், பத்மா

From நூலகம்
Name பத்மா
Birth
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளங்கோவன், பத்மா யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர். ராணி மகேசு என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். பத்மா மூத்த எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பிரான்ஸில் வாழ்ந்து வருகிறார். தனது கல்லூரிகாலத்திலேயே எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார். கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியத்தில் எழுத்துத்திறனை வெளிப்படுத்தி வருகிறார் எழுத்தாளர். இவரின் ஆக்கங்கள் இலங்கை வானொலி, ஈழநாடு, தினகரன், தினபதி ஆகியவற்றிலும் மற்றும் பாரிஸ் வெளியாகும் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் இணையத்தளங்களிலும் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. பரிசு – சிறுவர் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர்.

விருது தமிழகத்தில் சிறந்த பரிசான சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறுவர் இலக்கியப் பணிக்கான பரிசு இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

படைப்புகள்

Resources

  • நூலக எண்: 10142 பக்கங்கள்
  • நூலக எண்: 35870 பக்கங்கள்
  • நூலக எண்: 35861 பக்கங்கள்
  • நூலக எண்: 10150 பக்கங்கள்
  • நூலக எண்: 10153 பக்கங்கள்
  • நூலக எண்: 10144 பக்கங்கள்

வெளி இணைப்புக்கள்