ஆளுமை:இராஜ ஸ்ரீகாந்தன்

From நூலகம்
Name இராஜ ஶ்ரீகாந்தன்
Birth 1948.04.20
Pages 2004.04.20
Place அல்வாய்
Category கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜ ஶ்ரீகாந்தன் (1948.04.20 - 2004.04.20) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த கல்வியியலாளர். இவர் யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது கவிதை 1970 இல் விவேகி என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. இவரால் நீதிபதியின் மகள் என்ற நூலும் காலச்சாளரம் என்ற சிறுகதைத் தொகுதியும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர், சோஷலிசம், தத்துவமும் நடைமுறையும், புதிய உலகம், சக்தி போன்ற வெளியீடுகளின் ஆசிரிய குழுவிலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 8853 பக்கங்கள் 35-36