ஆளுமை:இராஜேஸ்கண்ணன், இராஜேஸ்வரன்

From நூலகம்
Name இராஜேஸ்கண்ணன்
Pages இராஜேஸ்வரன்
Birth 1973,.01.22
Place கரவெட்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இராஜேஸ்கண்ணன், இராஜேஸ்வரன் (1973.01.22 - ) யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராஜேஸ்வரன். சமூகவியல் பட்டதாரியான இவர் யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். சத்திராதி, இராகன், வதிரி. இ. இராஜேஸ்கண்ணன் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் உதயன், சஞ்சீவி, தாமரை, ஞானம், இடி, தினக்குரல், தூண்டி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. மேலும் தொலையும் பொக்கிஷங்கள் என்ற இவரது சிறுகதை 2007 பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட ஆசிரிய அறிவுரைப்பு வழிகாட்டலிலும், ஞானம் மித்ராவுடன் இணைந்து தமிழகத்தில் வெளியிட்ட போர்க்காலக் கதைகள் என்ற தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன.


இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 43-48
  • நூலக எண்: 2048 பக்கங்கள் 27