ஆளுமை:அருளம்பலவனார், சுவாமிநாதன்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:19, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருளம்பலவா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளம்பலவானர், சு.
தந்தை சுவாமிநாதன்
பிறப்பு 1910
இறப்பு 1966
ஊர் காரைநகர்
வகை பண்டிதர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காரைநகர் உயர் குடியிலே 1910 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் திகதி பிறந்த அருளம்பலவானர் ஒரு பண்டிதர் ஆவார். இவரது தந்தையார் பெயர் சுவாமிநாதன். இவர் தனது ஆரம்பக் கல்வி, உயர்கல்வி இரண்டினையும் சுப்பிரமணிய வித்தியாசாலையில் கற்றுத் தேர்ச்சியடைந்து பின் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று ஆசிரியரானார். 1963 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்தார்.

பெரும்பாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, திருவாசகம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிப் பேரும் புகழும் பெற்றார். பதிற்றுப் பத்தின் உரைவளத்திற்காக இலங்கை சாகித்திய மண்டலத்தினால் ஆயிரம் ரூபா பரிசு பெற்றார். இதனைப் பாராட்டிய காரைநகர் மக்கள் விழா எடுத்துப் பொன்னாடை போர்த்தி பொற்கிழியும் வழங்கி 'சங்க நூற் செல்வர்' என்ற பட்டமும் வழங்கி கௌரவித்தனர். இவர் 1966ம் ஆண்டு வைகாசி மாதம் 7ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 313-314