ஆளுமை:அம்பலவாண நாவலர், ஆறுமுகப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:23, 26 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பலவாண நாவலர், ஆறுமுகப்பிள்ளை
தந்தை ஆறுமுகப்பிள்ளை
தாய் சுந்தரவல்லி
பிறப்பு
ஊர் வட்டுக்கோட்டை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆ. அம்பலவாண நாவலர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகப்பிள்ளை; தாய் சுந்தரவல்லி. இவர் மட்டுவில் வேற்பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களையும், நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதரிடம் சமஸ்கிருதத்தையும், சுழிபுரம் கனகரத்தின முதலியாரிடம் ஆங்கிலத்தையும் கற்று மும்மொழிகளில் தேர்ச்சியுடையவரானார்.

நாவலர் சற்குருமணிமாலை, திருவாதிரைச் திருநாள் மகிமைப் பிரபாவம், அருணாசல மான்மியம் ஆகியவை இவர் எழுதி வெளியான நூல்கள். பெரியபுராண பாடியம், ஆரிய திராவிடப் பிரகாசிகை ஆகியவை அச்சாகவில்லை. ஆறுமுக நாவலருக்கு நாவலர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்த திருவாடுதுறை ஆதீனம், சித்தங்கேணி அம்பலவாண சுவாமிகளுக்கும் நாவலர் என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 178-185
  • நூலக எண்: 963 பக்கங்கள் 11

வெளி இணைப்புக்கள்