ஆளுமை:அம்பலவாணர், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:57, 12 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அம்பலவாணர்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பலவாணர், வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1927.10.11
இறப்பு 1981.01.19
ஊர் வண்ணார்ப்பண்ணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வே.அம்பலவாணர் (1927.10.11 - 1981.01.09) யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணை நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட மிருதங்க கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. யாழ்.இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயின்று வந்த இவர் தனது மரபு வழித் தொழிலான பொன்னாபரணம் தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார். இவர் வாழ்ந்த சூழல் இசை ரசிக ஞானமுடையதாக இருந்தமையினால் மிருதங்கை இசையை இவர் கற்க தொடங்கினார்.

அரம்பத்தில் மிருதங்க இசையை ஆவரங்கால் பொன்னுசாமியிடமும் பின்னர் இந்திய நாட்டுக் கலைஞர் கோவிந்தப்பிள்ளை, பல்லிய வித்துவான் சுப்பையாபிள்ளை, சிதம்பரம் ஏ.எஸ்., இராமநாதன் ஆகியோரியம் மிருதங்க இசையை ஐயம் திரிபடக் கற்றார். பிற்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பேர் பெற்ற மிருதங்க வித்துவானாக இவர் திகழ்ந்தார். யாழ்.ரசிக ரஞ்சன சபாவில் இருபத்தெட்டு ஆண்டுகள் மிருதங்க இசையை மாணவர்களுக்கு போதித்து வந்த இவர் இல்ங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன மிருதங்க கலைஞராகவும் சேவை புரிந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 88