ஆளுமை:அப்துல் மலீக், கே. பீ. எம். சரீப்
From நூலகம்
Name | அப்துல் மலீக் |
Pages | கே. பீ. எம். சரீப் |
Pages | எஸ். ஸபூறா உம்மா |
Birth | 1965.09.13 |
Place | பொத்துவில் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்துல் மலீக், கே. பீ. எம். சரீப் (1965.09.13 - ) பொத்துவிலைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை கே. பீ. எம். சரீப்; தாய் எஸ். ஸபூறா உம்மா. இவர் பொத்துவில் அல் இர்பான் வித்தியாலயம், கம்பளை சாஹிராக் கல்லூரி, களுத்துறை தேசிய விஞ்ஞான சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் கற்று பொதுச் சுகாதாரப் பரிசோதகராக கடமையாற்றினார்.
1981 இல் எழுதத் தொடங்கிய இவர் இறைநேசன், அப்துல்லா, இளம்பிறை, மலிஹாநி போன்ற புனைபெயர்களில் பெருமளவு கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். தினகரன், நவமணி பத்திரிகைகளில் செய்தியாளராகக் கடமையாற்றிய இவர் சாமஶ்ரீ பட்டம் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 1740 பக்கங்கள் 129-132