"ஆளுமை:அப்துல் காதிர் புலவர், அல்லா பிச்சை ராவுத்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அப்துல் காதிர் புலவர், அல்லா பிச்சை ராவுத்தர் (1866 - 1918) கண்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அல்லா பிச்சை ராவுத்தர்; இவரது தாய் ஹவ்வா உம்மா. இவர் கண்டியிலுள்ள இராணி கல்லூரியில் (இப்போது திரினிற்றிக் கல்லூரி) தமிழும் ஆங்கிலமும் பயின்ற பின்னர் தென்னிந்தியாவுக்குச் சென்று திருப்பத்தூர் தமிழ் வித்தியாசாலைத் தலைமையாசிரியராக விளங்கிய வித்துவசிரோமணி முகமது முத்துபாவாப் புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.
+
அப்துல் காதிர் புலவர், அல்லா பிச்சை ராவுத்தர் (1866 - 1918) கண்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அல்லா பிச்சை ராவுத்தர்; தாய் ஹவ்வா உம்மா. இவர் கண்டியிலுள்ள இராணி கல்லூரியில் (இப்போது திரினிற்றிக் கல்லூரி) தமிழும் ஆங்கிலமும் பயின்ற பின்னர் தென்னிந்தியாவுக்குச் சென்று திருப்பத்தூர் தமிழ் வித்தியாசாலைத் தலைமையாசிரியராக விளங்கிய வித்துவசிரோமணி முகமது முத்துபாவாப் புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.
  
 
இவர் தமது பதினாறாவது வயதில் கவியரங்குகளிற் கலந்து ''யாழ்ப்பாண சங்கன்'', ''மெய்ஞ்ஞான அருள்வாக்கி'' என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றதுடன் 1912 இல் வித்துவ தீபம், உலகதீபம், கல்விக் கடல் போன்ற பட்டங்களை இலக்கியப் பணிக்காகவும் பெற்றிருந்தார். இவர் கண்டிக் கலம்பகம், கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி, கண்டி நகர்ப்பதிகம், சலவாத்துப் பதிகம், தேவாரப் பதிகம், பதாயிகுப் பதிகம், பிரான்மலைப் பதிகம், திருபகுதாதந்தாதி, மெய்ஞ்ஞானக் குறவஞ்சி, மெய்ஞ்ஞானக் கோவை, கோட்டாற்றுப் புராணம், உமரொலியுல்லா பிள்ளைத்தமிழ், காரணப் பிள்ளைத்தமிழ், சித்திரக் கவிப்புஞ்சம், பிரபந்த புஞ்சம், ஆரிபுமாலை, பேரின்ப ரஞ்சித மாலை, ஞானப்பிரகாச மாலை, புதுமொழி மாலை, திருமதீனத்துமாலை, வினோத பதமஞ்சரி, நவமணித் தீபம், சந்தத் திருப்புகழ் முதலான 30 இற்கும் மேற்பட்ட நூல்களை இஸ்லாம் சமயம் சார்ந்து இயற்றியுள்ளார்.  
 
இவர் தமது பதினாறாவது வயதில் கவியரங்குகளிற் கலந்து ''யாழ்ப்பாண சங்கன்'', ''மெய்ஞ்ஞான அருள்வாக்கி'' என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றதுடன் 1912 இல் வித்துவ தீபம், உலகதீபம், கல்விக் கடல் போன்ற பட்டங்களை இலக்கியப் பணிக்காகவும் பெற்றிருந்தார். இவர் கண்டிக் கலம்பகம், கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி, கண்டி நகர்ப்பதிகம், சலவாத்துப் பதிகம், தேவாரப் பதிகம், பதாயிகுப் பதிகம், பிரான்மலைப் பதிகம், திருபகுதாதந்தாதி, மெய்ஞ்ஞானக் குறவஞ்சி, மெய்ஞ்ஞானக் கோவை, கோட்டாற்றுப் புராணம், உமரொலியுல்லா பிள்ளைத்தமிழ், காரணப் பிள்ளைத்தமிழ், சித்திரக் கவிப்புஞ்சம், பிரபந்த புஞ்சம், ஆரிபுமாலை, பேரின்ப ரஞ்சித மாலை, ஞானப்பிரகாச மாலை, புதுமொழி மாலை, திருமதீனத்துமாலை, வினோத பதமஞ்சரி, நவமணித் தீபம், சந்தத் திருப்புகழ் முதலான 30 இற்கும் மேற்பட்ட நூல்களை இஸ்லாம் சமயம் சார்ந்து இயற்றியுள்ளார்.  

04:24, 27 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அப்துல் காதிர் புலவர்
தந்தை அல்லா பிச்சை ராவுத்தர்
தாய் ஹவ்வா உம்மா
பிறப்பு 1866
இறப்பு 1918
ஊர் கண்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் காதிர் புலவர், அல்லா பிச்சை ராவுத்தர் (1866 - 1918) கண்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அல்லா பிச்சை ராவுத்தர்; தாய் ஹவ்வா உம்மா. இவர் கண்டியிலுள்ள இராணி கல்லூரியில் (இப்போது திரினிற்றிக் கல்லூரி) தமிழும் ஆங்கிலமும் பயின்ற பின்னர் தென்னிந்தியாவுக்குச் சென்று திருப்பத்தூர் தமிழ் வித்தியாசாலைத் தலைமையாசிரியராக விளங்கிய வித்துவசிரோமணி முகமது முத்துபாவாப் புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.

இவர் தமது பதினாறாவது வயதில் கவியரங்குகளிற் கலந்து யாழ்ப்பாண சங்கன், மெய்ஞ்ஞான அருள்வாக்கி என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றதுடன் 1912 இல் வித்துவ தீபம், உலகதீபம், கல்விக் கடல் போன்ற பட்டங்களை இலக்கியப் பணிக்காகவும் பெற்றிருந்தார். இவர் கண்டிக் கலம்பகம், கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி, கண்டி நகர்ப்பதிகம், சலவாத்துப் பதிகம், தேவாரப் பதிகம், பதாயிகுப் பதிகம், பிரான்மலைப் பதிகம், திருபகுதாதந்தாதி, மெய்ஞ்ஞானக் குறவஞ்சி, மெய்ஞ்ஞானக் கோவை, கோட்டாற்றுப் புராணம், உமரொலியுல்லா பிள்ளைத்தமிழ், காரணப் பிள்ளைத்தமிழ், சித்திரக் கவிப்புஞ்சம், பிரபந்த புஞ்சம், ஆரிபுமாலை, பேரின்ப ரஞ்சித மாலை, ஞானப்பிரகாச மாலை, புதுமொழி மாலை, திருமதீனத்துமாலை, வினோத பதமஞ்சரி, நவமணித் தீபம், சந்தத் திருப்புகழ் முதலான 30 இற்கும் மேற்பட்ட நூல்களை இஸ்லாம் சமயம் சார்ந்து இயற்றியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 08
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 46