ஆளுமை:அடைக்கலமுத்து, தம்பிமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அடைக்கலமுத்து, அமுதசாகரன்
தந்தை தம்பிமுத்து
தாய் சேதுப்பிள்ளை
பிறப்பு 1918.09.15
இறப்பு 2010.10.23
ஊர் நெடுந்தீவு
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அடைக்கலமுத்து, அமுதசாகரன் (1918.09.15 - 2010.10.23) நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர். இவரது தந்தை தம்பிமுத்து; தாய் சேதுப்பிள்ளை. இவர் புலவர் அமுது என அறியப்பட்டார். யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் வித்தியாலயம், யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி, கொலம்பகம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். வித்துவான், பண்டிதர் பட்டங்களைப் பெற்று ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

இவர் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியதுடன் நெடுந்தீவின் சிறப்பைப் பற்றிப் பல கவிதைகளில் பாடியுள்ளார். நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை திரேசா, மடுமாதா காவியம், அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள் போன்றவை இவரது நூல்கள். இவரது படைப்புக்களின் பெருந்தொகுப்பாக இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள் என்னும் நூல் 1600 பக்கங்களில் வெளியாகியுள்ளது.

செவாலியே விருது பெற்ற இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கியுள்ளது. 2005 இல் கலாபூசணம் விருதும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 90-95
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 395-397
  • நூலக எண்: 3848 பக்கங்கள் 136