ஆளுமை: லீலா நாகரத்தினம்
Name | லீலா |
Pages | பொன்னையா |
Pages | - |
Birth | - |
Pages | -- |
Place | - சுதுமலை |
Category | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருமதி. லீலா நாகரத்தினம் சுதுமலையில் என்னும் ஊரில் பிறந்தவர் . தந்தை பொன்னையா, இவர் தனது ஐந்தாவது வயதில் சுதுமலை 'சின்மயபாரதி என்னும் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கினார். தமிழ் 3ஆம் வகுப்பு படித்தவுடன் 9வது வயதில் ஆங்கில மொழிமூலம் தான இடைநிலை கல்வியை மானிப்பாய் மெமோறியல் பாடசாலையில் கற்றபின் 6ஆம் வகுப்பு தொடக்கம் மெற்றிக்குலேசன் பரீட்சை எழுதும் வரை இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்றார். 1943ஆம் ஆண்டு தை மாதம் மெற்றிக்குலேசன் பரீட்சை எழுதி மே மாதம் பெறுபேறுகளைப் பெற்றார். இக்காலகட்டத்தில் பதில் ஆசிரியராக கொக்குவில் இந்துக் கல்லூரியில் தனது முதல் ஆசிரியப் பணியை தொடங்கி 6 மாதம் படிப்பித்தார். யாழ். இந்து மகளிர் கல்லூரி 1943ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 10ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இவர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அன்று தொட்டு ஓய்வு பெறும் வரை 40 ஆண்டுகள் எங்கள் கல்லூரியில் சேவை செய்தார். இவர் 1955ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்து பட்டதாரி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டார். அவரின் நடை, உடை, கற்பித்தல் முறை என்பன தனித்துவமானதும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதுமாகும் (தனிச்சிறப்பு Something Special) 1975ஆம் ஆண்டு அக்கல்லூரியின் உபஅதிபராக பதவி உயர்வு பெற்றார். திருமதி லீலா நாகரத்தினம் அவர்கள் 40வருட காலம் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் சேவையாற்றி ஒரு சாதனையைப் படைத்துள்ளார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய இலட்சியங்களுடன், தனது ஆசிரியத்தொழிலை திறம்படச் செய்து, கல்லூரியின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பெரும் பங்கினை ஆற்றியுள்ளார் என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. அவர் மாணவ சமுதாயத்தை சிறந்த பாதையிலேயே வழிநடத்திச் சென்றுள்ளார். "அடிக்கின்ற கைதான் அணைக்கும்" என்பது ஒரு முதுமொழி. திருமதி லீலா நாகரட்ணம் அவர்கள் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர்களுள் ஒருவராவார் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி தற்போதைய இடத்திற்கு வரமுன்பே அவர் கல்லாரியுடன் இணைந்து செயற்பட்டவர். கல்லூரி ஸ்தாபித்த காலத்தில் ஆசிரிய அத்தாட்சிப் பத்திரத்துடன் ஆசிரிய சேவையில் ஈடுபட்டவர் அக்காலத்தில் கல்லூரி வளாகத்தில் கல்லுப் பொறுக்கிப் புல்லுப் பிடுங்கி சுத்தம் செய்தவர்களுள் ஒருவராவார். அப்போதைய முதல்வராகிய செல்வி பத்மாவதி இராமநாதனுடன் இணைந்து பல் வழிகளிலும் கல்லூரியை உயர்தினார். இவர்கள் ஒழுக்கமே மேன்மை கொடுக்கும் என்பதைத் தாமும் கடைப்பிடித்து மாணவர்கள் மனதிலும் அப் பண்பினைப் பதியச் செய்தனர். இவர்கள் காலத்தில் எங்கள் கல்லூரி சகல துறைகளிலும் பூரண வளர்ச்சிபெற்று யாழ் மாவட்டத்தில் மட்டுமன்றி அகில இலங்கை முழுவதிலும் புகழைப் பரப்பியது. இக்கல்லூரிக்கு அரும்பெரும் சேவையாற்றி 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார்.