ஆளுமை:ஶ்ரீதரன், இராசையா

From நூலகம்
Name ஶ்ரீதரன்
Pages இராசையா
Birth 1950.01.15
Place வண்ணார்பண்ணை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீதரன், இராசையா (1950.01.15 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்லிசைக் கலைஞர். இவரது தந்தை இராசையா. இவர் வில்லிசை, தெய்வீகச் சொற்பொழிவு, கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல் ஆகிய துறைகளில் ஆற்றலுடன் செயற்படுகின்றார். இவரின் கவிதைகள், கட்டுரைகள் ஈழத்தில் வெளிவரும் முன்னணித் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன.

இவர் சைவசமய தரிசனம், பாலர் தோத்திரத் திரட்டு, நல்லை ஆதீன முதல்வர் நற்சரிதம், மழலைச் செல்வம், மழலைத் தமிழ் இன்பம், மழலைத் தமிழமுதம், வில்லிசைக் கலை ஆகிய நூல்களை எழுதியும் தொகுத்தும் வெளியிட்டதுடன் ஆன்ம ஈடேற்றம், நற்சிந்தனை, ஆலய வழிபாடு போன்ற சமயச் சொற்பொழிவுகளை ஆலயங்களில் நிகழ்த்தி வருகின்றார். இவரது சமய, இலக்கிய, வில்லிசைக் கலைப்பணிகளுக்காக மக்கள் நிறுவனங்களினால் சைவப்புலவர், கவிமணி, சிவநெறிக் கலாநிதி, மரபுக் கலைச்சுடர், சிவநெறித் தொண்டர் எனப் பல பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவரின் கலைப்பணிக்காக 2005 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேசக் கலாச்சாரப் பேரவை பாராட்டிக் கௌரவித்துக் கலைஞானச்சுடர் என்ற விருதை வழங்கியுள்ளது.


இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 118
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 21-22
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 55