ஆளுமை:வையாபுரி ஐயர்

From நூலகம்
Name வையாபுரி ஐயர்
Birth
Place மாதகல்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வையாபுரி ஐயர் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகலைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். இவர் வையாபாடல் (யாழ்ப்பாண வரலாற்று நூல்), பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இப்போது அச்சிடப்பட்ட வையாபாடலில் 105 செய்யுட்கள் காணப்படுகின்றன. மிகுதி செய்யுட்கள் அழிவடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றன.

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 70
  • நூலக எண்: 963 பக்கங்கள் 213


வெளி இணைப்புக்கள்

தமிழ் விக்கிப்பீடியாவில் வையாபுரி ஐயர்