ஆளுமை:வேந்தனார், கனகசபைப்பிள்ளை

From நூலகம்
Name வேந்தனார்
Pages கனகசபைப்பிள்ளை
Pages தையல்முத்து
Birth 1918.11.05
Pages 1966.09.18
Place வேலணை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேந்தனார், கனகசபைப்பிள்ளை (1918.11.05 - 1966.18.09) வேலணையைச் சேர்ந்த புலவர், கவிஞர். இவரது தந்தை கனகசபைப்பிள்ளை; தாய் தையல்முத்து. இவரது இயற்பெயர் நாகேந்திரம் பிள்ளை என்பதாகும். இவர் தனித்தமிழ் ஆர்வத்தினால் வேந்தனார் என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

இவர் இளமையில் பயில்கின்ற போதே இந்துசாசனம், ஈழகேசரி போன்ற இதழ்களில் இலக்கிய, சமயக் கட்டுரைகளை வரைந்ததோடு பின்பு வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுதந்திரன் ஆகிய ஏடுகளில் கட்டுரைகள் எழுதினார். இவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்துக் கவிதைப் பூம்பொழில் என்னும் பெயருடன் ஶ்ரீலங்கா புத்தகசாலை வெளியிட்டுள்ளது. இந்து சமயம், திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சியும் குயிற்றுப்பத்தும், கவிதைப் பூம்பொழில், குழந்தை மொழி, தன்னோர் இலாத தமிழ் போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவருக்கு மதுரைச் சங்கத்தில் பண்டிதர் பட்டமும் சைவசித்தாந்த சமாசத்தினால் சைவப்புலவர் பட்டமும் சென்னை பல்கலைக்கழகத்தினால் வித்துவான் பட்டமும் திருவாடுதுறை ஆதீனத்தாரால் தமிழன்பர் பட்டமும் ஶ்ரீலங்கா சைவாதீனத்தாரால் சித்தாந்த சிரோமணி பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 13-14

வெளி இணைப்புக்கள்