ஆளுமை:ருஷ்தா பின்த், ஜவ்ரியா
From நூலகம்
| Name | ருஷ்தா பின்த் |
| Pages | முஸம்மில் |
| Pages | ஜவ்ரியா பீபி |
| Birth | 1998.07.08 |
| Place | தெல்தோட்டை வனஹபுவ |
| Category | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ருஷ்தா பின்த், ஜவ்ரியா தெல்தோட்டை வனஹபுவயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஸம்மில்; தாய் ஜவ்ரியா. ஆரம்ப, இடைநிலை, உயர் கல்வியை தெல்தோட்டை க/எனசல்கொல்ல மத்திய கலலூரியில் கல்வி கற்றார். பேராதனை பல்கலைக்ழகத்தின் மாணவியாவார்.
இவரின் சிறுகதைகள் விடிவெள்ளி பத்திரிகையிலும்,அகரம் சஞ்சிகையிலும் வெளியாகியுள்ளன. இவர் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ”விதை” எனும் பெயரில் 2015ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். விடிவெள்ளி பத்திரிகையில் ”கலமுல் இஸ்லாம்” என்ற தலைப்பிலான பகுதியில் இன்று வரை ”மாநபி விருட்சம்” என்ற பெயரில நபி (ஸல்) அவர்களின் வாழ்வை எடுத்தியம்பும் கதைத்தொடர் ஒன்றை இவர் எழுதி வருகிறார்.