ஆளுமை:யோகேஸ்வரன், வைத்திலிங்கம்

From நூலகம்
Name யோகேஸ்வரன்
Pages வைத்திலிங்கம்
Pages அன்னப்பிள்ளை
Birth 1960.05.03
Place குப்பிளான்
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகேஸ்வரன், வைத்திலிங்கம் (1960.05.03 - ) யாழ்ப்பாணம், குப்பிளானைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். இவரது தந்தை வைத்திலிங்கம்; தாய் அன்னப்பிள்ளை. இவர் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வரை கற்றார்.

இவரது முதலாவது நாடகமாக ஏழாவது வயதில் நடித்த சந்தி சிரிக்கிறது நாடகம் காணப்படுகின்றது. இவர் சுமாராக ஏழு நாடகங்கள் வரையில் நடித்ததுடன் புலம்பெயர்ந்தும் கவிதைகள், பாடல்கள், தத்துவச் சிறுகதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் எனப் பல்வேறு படைப்புக்களை எழுதியுள்ளார். இவரது ராகங்கள் என் காதில் என்னும் முதற் கவிதை பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி தமிழலை வானொலியில் 1998 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது. இக்கவிதையை இலண்டன் ஐ.பி.சி வானொலி முற்றத்து மல்லிகை என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியுள்ளது.

Resources

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 125-127
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 101-103