ஆளுமை:மயில்வாகனப் புலவர், கணபதிப்பிள்ளை
Name | மயில்வாகனப் புலவர் |
Pages | கணபதிப்பிள்ளை |
Birth | 1875 |
Pages | 1918 |
Place | தெல்லிப்பளை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மயில்வாகனப்புலவர், கணபதிப்பிள்ளை (1875 - 1918) யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, வறுத்தலைவிளானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் ஆரம்பகாலத்தில் அவ்வூரிலிருந்த அமெரிக்க மிஷன் தமிழ்ப் பாடசாலையிலும் தெல்லிப்பளையிலமைந்த அமெரிக்க மிஷன் ஆங்கில வித்தியாசாலையிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்வியை மேற்கொண்டார். இவர் தெல்லிப்பளையிலும் மல்லாகத்திலுள்ள ஆங்கில வித்தியாசாலையிலும் ஆங்கில ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றியதுடன் வட்டுக்கோட்டையிலும் மயிலிட்டியிலும் நொத்தாரிசாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த போது இந்து பரிபாலன சபையை நிறுவி அதற்கும் தாமே தலைவராக விளங்கினார்.
இவர் இணுவைப் பதிற்றுப்பத்தந்தாதி, மயிலை மும்மணிமாலை, விநாயகரகவல், மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், ஊஞ்சல், வைரவர் தோத்திரம், மாவைப்பதிகம், இணுவைப் பதிகம், துணவைப் பதிகம், கீரிமலை நகுலேஸ்வரர் மீது வினோதசித்திரகவிப்பூங்கொத்து, திருநீலகண்டநாயனார் சரித்திரம் (நாடகம்) ஆகிய நூல்களை இயற்றினார்.
Resources
- நூலக எண்: 3003 பக்கங்கள் 233-235
- நூலக எண்: 963 பக்கங்கள் 181-183