ஆளுமை:மகேஸ்வரன், கணபதிப்பிள்ளை

From நூலகம்
Name மகேஸ்வரன்
Pages கணபதிப்பிள்ளை
Birth
Place கரவெட்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேஸ்வரன், கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் இலக்கிய உலகிற்கு 1969 இல் ஈழநாடு-வாரமலர் நடத்திய கவிதைப் போட்டியில் எழுதியதன் மூலம் அறிமுகமானார். இவர் நவரசம், தாரகை ஆகியவற்றின் ஆசிரியராகவும் தொண்டனின் துணை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் வீரகேசரி, உதயன், சிரித்திரன், அரங்கம், ஞானம், ஜீவநதி ஆகியவற்றில் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவர் மலரும் வாழ்வு, எல்லை வேம்பு ஆகிய இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 153