ஆளுமை:மகாதேவா, பொன்னுச்சாமி

From நூலகம்
Name மகாதேவா
Pages பொன்னுச்சாமி
Birth 1942.04.25
Place பருத்தித்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாதேவா, பொன்னுச்சாமி (1942.04.25 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னுச்சாமி. இவர் செ. பொன்னுச்சாமியிடம் கலைப்பயிற்சி பெற்று 1960 ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் டிராமாஸ்கோப் வகையிலான நாடகங்களைத் தயாரித்து இயக்கிக் கதைவசனம் எழுதிப் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் முடியாத முடிச்சு, தணியாத தாகம், அவனும் மனிதன் தான், தைமூர், சுதந்திர நாட்டு அடிமைகள், நீயுமா போன்ற நாடகங்களை நடித்தார்.

இவர் 1965 இல் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் நடத்தப்பட்ட போட்டியில் வடமராட்சியில் முதலாவது ஆணழகனாகத் தெரிவு செய்யப்பட்டு மிஸ்ரர் வடமராட்சி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 204