ஆளுமை:பாலசுப்பிரமணியம், இராமசாமி

From நூலகம்
Name பாலசுப்பிரமணியம்
Pages இராமசாமி
Birth 1940.06.04
Place மாதனை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியம், இராமசாமி (1940.06.04 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இராமசாமி. இவர் 1952 ஆம் ஆண்டு முதல் கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.

இவர் 1952 ஆம் ஆண்டு மலருமா என்னும் சமூக நாடகத்தில் நடித்து நாடகத்துறையில் பிரவேசித்ததைத் தொடர்ந்து அனார்கலி, ஏழைப்பெண், இரத்தக்கண்ணீர் முதலான நூற்றுக்கும் மேற்பட்ட இசை நாடகங்களையும் சமூக நாடகங்களையும் நடித்துப் புகழ் பெற்றார்.

இவருக்கு இவரது கலைச்சேவைக்காகக் கலைமாமணி என்னும் பட்டம் நவாலி Y. M. C. இனால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2003 ஆம் ஆண்டு நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தினாலும், 2005 ஆம் ஆண்டு பிரதேச கலை இலக்கியப் பெருவிழாவில் வடமராட்சி வடக்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையினாலும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 196-197