ஆளுமை:பாலகிருஷ்ணன், சங்குப்பிள்ளை

From நூலகம்
Name பாலகிருஷ்ணன்
Pages சங்குப்பிள்ளை
Pages தாமரை
Birth 1957.05.12
Place அட்டன்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலகிருஷ்ணன், சங்குப்பிள்ளை (1957.05.12 - ) நுவரெலியா, அட்டனைச் சேர்ந்த ஒரு ஈழத்து எழுத்தாளர், ஆய்வாளர். இவரது தந்தை சங்குப்பிள்ளை; தாய் தாமரை. இவர் அட்டன் ஐலன்ஸ் தேசிய பாடசாலை, கண்டி அசோகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் கே. எஸ். பாலா, இளைய பாலா ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர் கதைகள், இசையும் கதையும் எழுதியுள்ளார்.

இவரது முதலாவது சிறுகதையான புதிய தீர்ப்பு 1980 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. 1990 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் இவரது முதலாவது கதை ஒலிபரப்பானது. இதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 150 இற்கு மேற்பட்ட அரசியல், அறிவியல், ஆரோக்கிய, சினிமா, இலக்கக் கட்டுரைகளையும், நான்கு தொடர் கதைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் பல பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

இவரது ‘பார்த்திபன் கனவு’ புதின நூலாக வெளிவந்து மத்திய மாகாண சாகித்திய விழாவில் சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது.


Resources

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 36-40
  • நூலக எண்: 10304 பக்கங்கள் 70

வெளி இணைப்புக்கள்