ஆளுமை:பரராஜசிங்கம், கனகரத்தினம்.
From நூலகம்
Name | பரராஜசிங்கம் |
Pages | கனகரத்தினம் |
Birth | 1943.11.22 |
Pages | 1989.04.07 |
Place | யாழ்ப்பாணம் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பரராஜசிங்கம், கனகரத்தினம். (1943.11.22 - 1989.04.07) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம். இவர் நல்லூர் செங்குந்தா இந்துக் கல்லூரியில் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகப் புவியியற் சிறப்புப் பட்டதாரியானார். இவர் தனது கல்லூரி ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் விளங்கிய சிவ சரவணபவானின் (சிற்பி) ஆசிரியத்தின் கீழ் இயங்கிய ”கலைச்செல்வி” சஞ்சிகையின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்தார். இவர் கல்லூரி மாணவர் சஞ்சிகையான ”சுடரொளியில் தன் எழுத்தின் தடத்தைப் பதித்தவராவார்.
இவர் துருவன் என்னும் புனைபெயர் கொண்டவர். இவரது பூ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் அவரின் மறைவின் பின்னர் அவரது துணைவியார் செல்வராணியால் மணி விழா நாளில் நூலுருப் பெற்று வெளிவந்தது.
Resources
- நூலக எண்: 300 பக்கங்கள் 171-172
- நூலக எண்: 7571 பக்கங்கள் 53