ஆளுமை:பரமசாமி, சந்திரபவாணி

From நூலகம்
Name சந்திரபவானி
Pages பிள்ளை அம்பலம்
Pages தங்கம்மா
Birth 1947.08.18
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர், கல்வியலாளர், சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமசாமி, சந்திரபவானி யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்த கல்வியலாளர். இவரது தந்தை பிள்ளைஅம்பலம்; தாய் தங்கம்மா. ஆரம்பக் கல்வியை இணுவில் மத்தியக் கல்லூரியிலும் இராமநாதன் இந்துக்கல்லூரியிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழக சிறப்பு தமிழ்மொழி கலைமாணி பட்டம் பெற்றுள்ளார். 1972ஆம் ஆண்டு தொழில் உத்தியோகத்தராக தனது தொழிலை ஆரம்பித்துள்ளார் பரமசாமி சந்திரபவானி. மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் தந்திரதேவா சுவாமியுடன் இணைந்து வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சமயம்சார்ந்த சமூகசேவையை மேற்கொண்டதாகக்கூறுகிறார் பரமசாமி சந்திரபவாணி. இணுவில் பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளையின் செயலாளராகவும் கொழும்புத் தமிழ்ச் சங்க உபதலைவராகவும் இருந்து தனது சேவையை மேற்கொண்டு வருகிறார். அத்துடன் களனி பல்கலைக்கழகம், கட்புல அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகம், அரச கருமமொழிகள் திணைக்களம், மொறட்டுவை பல்கலைக்கழகம், ரூபவாஹினிக்கூட்டுத்தாபனம், தேசிய லொத்தர் சபை ஆகியவற்றில் சிங்கள மாணவர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு பரமசாமி, சந்திரபவாணி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • தமிழ் இலக்கிய வினாவிடை 10ஆம் 11ஆம் வகுப்பு
  • சைவநெறி வினாவிடை 6ஆம், 7ஆம்,8ஆம் 9ஆம் 10ஆம் வகுப்பு