ஆளுமை:நாகரத்தினம், பொன்னுத்துரை

From நூலகம்
Name நாகரத்தினம், பொன்னுத்துரை
Pages சின்னத்தம்பி
Pages செல்லம்
Birth 1914.07.31
Pages 2004.06.28
Place வேலணை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகரத்தினம், பொன்னுத்துரை (1914.07.31 - 2004.06.28) வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் செல்லம். இவர் இளமையில் நாகபூசணி எனவும் அழைக்கப்பட்டார். இவர் பெண் கல்விக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

இவர் வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் ஆசிரியப் பணியை ஆரம்பித்து ஓய்வு பெறும் காலத்தில் மூன்று தலைமுறையினருக்குக் கல்வி புகட்டிய பெருமையைப் பெற்றவர். கல்விப்பணியினால் இவரை எல்லோரும் ரீச்சர் அக்கா அல்லது நாகரத்தினம் அக்கா என்றே அழைத்தனர்.

இவர் கிராமத்து அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் ஈடுபாடு கொண்டு கணவர் பொன்னுத்துரையுடன் இணைந்து தேர்தல் காலங்களில் வாக்குரிமை பற்றியும் வாக்களிப்பு முறைபற்றியும் மக்களுக்கு அறிவூட்டும் பணியினை முன்னெடுத்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 309-311