ஆளுமை:நல்லதம்பி, முருகுப்பிள்ளை
Name | நல்லதம்பி |
Pages | முருகுப்பிள்ளை |
Pages | தங்கமையார் |
Birth | 1896.09.13 |
Pages | 1951.05.08 |
Place | வட்டுக்கோட்டை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நல்லதம்பி, முருகுப்பிள்ளை (1896.09.13 - 1951.05.08) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், பல்கலைக்கழக விரிவுரையாளர். இவரது தந்தை முருகுப்பிள்ளை; தாய் தங்கம்மையார். இவர் இளமைக் கல்வியை வட்டுக்கோட்டையில் கற்றுப் பின் தெல்லிப்பளைக்குச் சென்று உயர்தரக் கல்வி பயின்றார். இவர் 1914 ஆம் ஆண்டு தெல்லிப்பளைப் போதனாமுறைப் பயிற்சிக்கழகத்தில் சேர்ந்து பயிற்றப்பட்ட தமிழாசிரியராக வெளியேறினார்.
இவர் கவிதைகளை எழுதியதுடன் பாடல்களை இயற்றிப் பாடியுமுள்ளார். இவரால் இலங்கையின் தேசியகீதம் தமிழ் மொழியில் 1950 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது. இவர் மணித்தாய் நாடும் மரதனோட்டமும், மொழிப் பயிற்சி ஆகிய நூல்களை ஆக்கியுள்ளதோடு சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவரைத் தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி 1940 ஆம் ஆண்டு கௌரவித்தனர்.
Resources
- நூலக எண்: 6029 பக்கங்கள் 22-24
- நூலக எண்: 963 பக்கங்கள் 161-163