ஆளுமை:நமசிவாயம், இ.

From நூலகம்
Name நமசிவாயம்.
Birth 1915
Place மயிலிட்டி
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நமசிவாயம், இ யாழ்ப்பாணம், மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஆசிரியர். இவர் வித்துவ சிரோமணி சி.கணேசையரின் முதல் மாணவர் ஆவார். யாழ்ப்பாணத்துக் கணேசையர் கல்லூரியில் கல்விப்பாரம்பரியத்தின் இலக்கணச் செம்மையைப் பலருக்கும் ஊட்டி வந்துள்ள இவர், வீமன்காமம் வித்தியாலயத்தில் தழிழ்ப் பேராசானாகவும் தலைமையாசிரியராகவும் கடமையற்றியவர்.

இவர் மல்லாகம் பண்டித மாணவர் கழகத்தில் கற்பித்துப் பல பண்டிதர்களை உருவாக்கினார். இவருக்கு 19.03.2000 ஆம் அன்று நல்லையாதீனத்தில் சதாபிஷேகமும், துர்க்காமணி மண்டபத்தில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் பாராட்டுவிழாவும் நடைபெற்றது. அத்தருணத்தில் இவரைப்பற்றிய “தேசிகம்” என்னும் நூலும் இவரது ஆக்கங்களைக் கொண்ட “வித்தகர் தரிசனம்” என்னும் நூலும் வெளியிடப்பட்டன.

இவர் சந்நிதிக்கந்தன் சதகம், மாவைக்கந்தன், நகுலேசர் திருவந்தாதி முதலான பல நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் “இலக்கணவித்தகர்” பட்டத்தையும் யாழ்ப்பாணம் ஆரியதிராவிட பாஷா அபிவிருத்திச்சங்கம் “வித்துவசிரோமணி” என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்துள்ளது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 105


வெளி இணைப்புக்கள்