Name | நடராஜன் |
Pages | சோமசுந்தர ஐயர் |
Pages | மனோன்மணி |
Birth | |
Place | புன்னாலைக்கட்டுவன் |
Category | அறிவிப்பாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடராஜன், சோமசுந்தர ஐயர் யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அறிவிப்பாளர். இவரது தந்தை சோமசுந்தர ஐயர்; இவரது தாய் மனோன்மணி. இவர் புன்னாலைக்கட்டுவன் அரசினர் பாடசாலை, ஏழாலை விக்னேசுவரா வித்தியாலயம், உரும்பராய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார்.
இவர் இலங்கை வானொலியில் வீ. ஏ. கபூர் தயாரித்து வழங்கிய வளரும் பயிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் சிறுவர் மலர் நிகழ்ச்சியின் வானொலி மாமாவாக இருந்து அந்நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குச் செய்திகளை மொழிபெயர்த்து வாசித்து வந்ததுடன் பலதும் பத்தும், முத்தி நெறி, செய்தியின் பின்னணியில், வெளிநாட்டுச் செய்தி விமர்சனம், தொழிலாளர் வேளை, சைவநீதி போன்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்து வந்துள்ளார்.
இவர் இந்து சமயக் கலாச்சார அமைச்சினால் சைவ நன்மணி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
Resources
- நூலக எண்: 1027 பக்கங்கள் 57
- நூலக எண்: 1029 பக்கங்கள் 39
- நூலக எண்: 2080 பக்கங்கள் 47