ஆளுமை:தில்லைநாதநாவலர், மயில்வாகனன்

From நூலகம்
Name தில்லைநாத நாவலர்
Pages மயில்வாகனன்
Birth 1854
Pages 1939
Place புலோலி
Category எழுத்தாளர், சொற்பொழிவாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தில்லைநாத நாவலர், மயில்வாகனன் (1854 - 1939) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர், சொற்பொழிவாளர். இவரது தந்தை மயில்வாகனன். இளமைக்காலத்திலிருந்து தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆர்வம் மிகுந்த இவர், உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் நீதி நூல்களையும் இலக்கணங்களையும் புராணங்களையும் கற்றார்.

இவர் இளமைக் காலத்தில் இந்தியாவுக்குச் சென்று சொற்பொழிவுகளை ஆற்றியதைப் பாண்டித்துறை தேவர் வரவேற்றுப் போற்றியதோடு, குன்றக்குடி திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த அம்பலவாண தேசிகரும் மதுரை ஆதீனத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்த தேசிகரும் திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்த தாண்டவராய தேசிகரும் குழுமிப் போற்றி நாவலர் பட்டம் வழங்கினர்.

இவர் திருவிளையாடற் புராணத்தின் வேதப் பொருளரருளிச் செய்த படலத்துக்கு அகவுரையெழுதி வெளியிட்டுள்ளார். இவரால் திருவள்ளுவர் சமணர் என்னும் கொள்கை மறுப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 158-159