ஆளுமை:திரவியம் இராமச்சந்திரன், வேலுப்பிள்ளை

From நூலகம்
Name திரவியம் இராமச்சந்திரன்
Pages வேலுப்பிள்ளை
Pages பாக்கியம்
Birth 1919.10.03
Pages 1988.04.16
Place கல்முனை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திரவியம் இராமச்சந்திரன், வேலுப்பிள்ளை (1919.10.03 - 1988.04.16) அம்பாறை, கல்முனையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் பாக்கியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும் உயர் கல்வியை மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் பாடசாலையிலும் பெற்றுக் கொண்டார்.

இவர் உடுவில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் டிப்ளோமாவைப் பெற்றுக் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும் மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் பாடசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றி, தாண்டவன்வெளி பெண்கள் பாடசாலையில் அதிபரானார்.

இவர் கல்லூரி மட்டத்தில் உத்தமன் பரதன், செஞ்சோற்றுக் கடன் தீர்த்த செம்மல், கோலியாத்தை வென்ற குமரன், பாலன் பிறந்தான் ஆகிய கூத்துக்களையும் மனோன்மணியம், பாண்டியன் பரிசு, கடல் கண்ட கனவு, பார்த்திபன் கனவு, அம்பை பெற்ற அன்பு ஆகிய நாடகங்களையும் எழுதி, மேடையேற்றியதோடு மாவட்ட ரீதியான கூத்து, நாடகப் போட்டிகளில் மத்தியஸ்தம் வகித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 96-97