ஆளுமை:டானியல் அன்ரனி

From நூலகம்
Name டானியல் அன்ரனி
Birth 1947.07.13
Pages 1994
Place நாவாந்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டானியல் அன்ரனி (1947.07.13 - 1994) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதைகளை ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார். காலப்போக்கில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கத்தினாலும் நல்ல இலக்கியங்களில் ஏற்பட்ட பரீட்சயம் காரணமாகவும் சமூகப் பார்வையோடு கூடிய சிறுகதைகளை எழுதத் தொடங்கினார்.

இவர் "செம்மலர் இலக்கிய வட்டத்தின் உருவாக்கத்தில் பங்காற்றியவர். இவ் அமைப்பினூடாக "அணு" என்ற சஞ்சிகையை வெளியிட்டார். மூன்றாவது இதழுடன் வெளியீடு தடைப்பட்டபின் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1979 இல் "சமர்" என்னும் சஞ்சிகையை ஆரம்பித்து 1990கள் வரை நடாத்தினார்.

Euro Asia arts & science academic international நிறுவனம் 2014.08.10 அன்று பிரான்ஸ் நாட்டில் நடாத்திய பல்துறை சார்ந்த விருது வழங்கும் விழாவில் இவரது கலை இலக்கியத்துறை மற்றும் விளையாட்டு சமூக சேவைகளைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கிக் கௌரவித்தது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

Resources

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 231-234