ஆளுமை:ஞானமுத்து, வேலாயுதம்

From நூலகம்
Name ஞானமுத்து
Pages வேலாயுதம்
Birth 1924.03.04
Pages 1997.05.21
Place பழுகாமம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானமுத்து, வேலாயுதம் (1924.03.04-1997.05.21) மட்டக்களப்பு, பழுகாமத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலாயுதம். பழுகாமம் மெதடிஸ் மிசன் பாடசாலை, மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி, கொழும்பு திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், தனது 71 ஆவது வயதில் கனடா ரொரன்ரோ யோர்க் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கலைமாணிப் பட்டம் பெற்றார்.

ஆரம்பத்தில் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றிய இவர், பின் பதவி உயர்வுகள் பெற்று உதவி அரசாங்க அதிபராகவும் பணி செய்து ஓய்வு பெற்றார். இவர் இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், அரசியல் அமைப்புக்கள் ஆகியவற்றில் இணைந்து பணி செய்துள்ளார். இவர் மோகன் ஜோவி என்ற புனைபெயரில் பத்திரிகைகளில் சமுக நலக் கட்டுரைகளையும் உணர்வூட்டுங் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 170-171