ஆளுமை:ஜெயபாரதி, கௌசிகன்

From நூலகம்
Name ஜெயபாரதி, கௌசிகன்
Pages நவரத்தினம்
Pages சுசீலாதேவி
Birth 1974.07.28
Pages -
Place கரணவாய்
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயபாரதி, கௌசிகன் (1974.07.28) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நவரத்தினம்; தாய் சுசீலாதேவி. இந்தியாவின் பிரபல இசை வித்துவான் ஶ்ரீ சந்தான ஐயரிடம் இசையை கற்றுத்தேர்ந்த இவர் மேலும் தனது இசைப் பாரம்பரியத்தில் இருந்து தனது தந்தையாரிடமும், பிரபல வித்துவான் இராமநாதன் ஐயரின் சகோதரி ஶ்ரீமதி மங்களா ஶ்ரீதரனிடமும், தங்கராணி கனகசபையிடமும் தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார்.

இவர் 1000க்கும் மேற்பட்ட இறுவெட்டுக்களில் பாடியுள்ளதோடு யாழ் முன்னணிக் கலைஞர்கள் ஒருங்கே இணைந்து நடாத்திய பல்லாயிரக்கணக்கான மேடைகளிலும் பாடியுள்ளார். இவரது இசைத் திறமைக்காக வசிகரக்குயில் என்ற பட்டத்தினை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.