ஆளுமை:சேவியர், தே.

From நூலகம்
Name சேவியர்
Birth 1949.05.25
Place மட்டுவில்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேவியர், தே. (1949.05.25 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் நந்தினி சேவியர் என்னும் புனைபெயரால் அறியப்படுகின்றார். இவர் மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார்.

இவருடைய படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி, சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அயற் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், நெல்லிமரப் பள்ளிக்கூடம், நந்தினி சேவியர் படைப்புகள் ஆகியவை இவரது நூல்கள். இவர் கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது, வடமாகாண சிறந்த நூல் பரிசு, சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூசணம் விருது ஆகிய விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 230 பக்கங்கள் 13-14